கௌலவம் என்றால் பன்றி என்று அர்த்தம்.
- தேவதை – மித்திரன்
- ராசி – மகரம்
- கிரகம் – சனீஸ்வர பகவான்
- சேத்திரம் – ஸ்ரீமுஷ்ணம் (வடலூருக்கு அருகில் இருக்கக் கூடியது – பூவராக சுவாமி கோவில்)
- வராகியும் வழிபாடு செய்யலாம்
- மலர் – மகிழம்பூ
- வருடம் – 18 வருடம் நின்று பணி செய்யும்
- ஆகாரம் – பணியாரம்
- பூசும் பொருள் -குங்குமம்
- ஆபரணம் – வெள்ளி
- தூபம் – வில்வ பொடி
- வஸ்திரம் – கண்டாங்கி வஸ்திரம்
- உலோகம் – செம்பு
கௌலவ கர்ணத்தில் செய்யத் தக்கவை
- புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ளலாம்
- சேமிப்பு தொடங்க மிக நல்ல கர்ணம்
- சம்பந்தி உறவுடன் உறவாட
- பிரயாணங்கள்
- சுப காரியங்கள்
- மந்திரங்கள் கற்று கொள்ளுதல்
- யுத்தம் செய்தல்
- முடியாத விஷயங்களை முடிக்க
- விருந்துக்கு செல்வது, சம்பந்திகள் இடம் பேசுவது இந்த கரணத்தில் செய்யும் பொழுது சிறப்பாக இருக்கும்.
குணாதிசயங்கள்
- எல்லோருக்கும் பிரியமானவர்கள்
- சொத்து அமையும் போது அவரிதமான வளர்ச்சி அடைவார்கள்
- தடை தாமதத்திற்கு பிறகு வீடு அமையும்
- வாக்கு பலிதம் உண்டு
- குடும்பத்தார் மீது பற்று பாசம் மிக்கவர்கள்
- சமயோகித புத்தி உடையவர்கள்
- நட்பை விரும்பக் கூடியவர்கள்
- கூட்டுக்குடும்பத்தில் தலைவர்களாக இருப்பார்கள்
- பூர்விக வீட்டுக்கு அருகில் கோவில் இருக்கும்
- மிகவும் நல்லவர்கள்
- இவர்களுக்கு என்று ஒரு தனி நட்பு வட்டாரம் உண்டு
- நட்பு, அன்பு, பாசம், காதல் உள்ள குடும்பம்
- சுயநலம் உண்டு
- எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் மிகுந்தவர்கள்
- தடை தாமதத்திற்கு பிறகு தான் வீடு அமையும்
- கருக்கலைப்பு செய்த குடும்பம்
- வாக்கு பலிதம் உண்டு (இவர்கள் ஐந்தாம் பாவகம் சம்பந்தமான விஷயங்களை சொன்னால் அப்படியே நடக்கும் குறிப்பாக குழந்தை பிறப்பு பற்றி சொன்னார்கள் என்றால் அப்படியே நடக்கும்)
- கோபத்தை அடக்க முடியாதவர்கள்
- கோபத்தை சாப்பாட்டின் மீது காமி பார்கள்
- தலைமை தாங்கி எதையும் நடத்தும் திறமை
- அத்தையின் மண வாழ்க்கை சிறப்பாக இருக்காது
- இவர்கள் ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால் தந்தைக்கு உயர்வு தந்திருக்கும்
- பெரிய தொழில் நிறுவனங்களில் வேலை செய்வார்கள் அல்லது பெரிய நிறுவனங்களை நிறுவனம் என்ற எண்ணம் இருக்கும்
- இவர்கள் தவறான பழக்க வழக்கத்தை பழகிக்கொண்டால் கடைசி வரை நிறுத்த முடியாமல் கஷ்டப்படுவார்கள்
- கௌலவத்தில் ஒரு குழந்தை பிறக்க கட்டாயம் அந்த குடும்ப முன்னேற்றம் அடையும்
- இவர்களிடம் ஒரு பொருளை வாங்கிக் கொண்டு சென்றால் அடுத்தவர்களுக்கு அது நன்மை சேர்க்கும்
- மண்ணைத் தோண்டி செய்யக்கூடிய தொழில்கள், இரும்பு, ஜோதிடம், பெரிய வாகனங்கள், லேபர் காண்ட்ராக்ட்
பரிகாரம்
- தினமும் வெயிலில் காலனி இல்லாமல் நடக்க வேண்டும் அல்லது காலனி தானம் கொடுப்பது சிறப்பு
- சனிக்கிழமையில் திருநள்ளாறு பதிகம் படிப்பது சிறப்பு
- குறிப்பாக 7 1/2 மணி நடப்பவர்கள், அஷ்டம சனி நடப்பவர்கள் கௌலவ கரணம் வரும் நாளில் திருநள்ளாறு பதிகம் படிப்பது சிறப்பு
- பள்ளியறை பூஜை பார்ப்பது சிறப்பு
- திருதியை திதி, ரோகினி நட்சத்திரம், சனிக்கிழமை, கௌலவ கரணம் இவை நான்கும் சேர்ந்து வரக்கூடிய நாளில் ஏதேனும் பொருளை வாங்கினால் அபரிவிதமான வளர்ச்சியை தரும்
ஸ்தலங்கள்
- உத்திரகோசமங்கை வராகி
- பல்லூர் வராகி
- ஸ்ரீவாஞ்சியம்
- திருநள்ளாறு