காரடையான் நோன்பு -அடை செய்யும் முறை

தேவையான பொருட்கள்
வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/4 கப்
தேங்காய் சிறிய பற்களாக கீரியது – அரை கப்
வெல்லம் [பொடித்தது] 1 கப்
ஏலக்காய் தூள் 1 டீ ஸ்பூன்
தண்ணீர் 2 கப்

அடை செய்முறை: காராமணியை வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை போட்டு கொதிக்கவிடவும். வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் “தள தள’ என்று கொதிக்கும் போது காராமணி, தேங்காய் துண்டுகள், ஏலப்பொடி சேர்க்கவும். வறுத்து வைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும். மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடை போல் தட்டி வாழை இலையில் வைக்கவும். இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *