ரிஷபத்தில் பத்தில் சனி
இதுவரையில் உங்கள் ரிஷபம் ராசிக்கு பாக்கியஸ்தானம் எனும் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரித்து வந்த சனி பகவான் உங்கள் முயற்சிகளில் தோல்வியும் நிம்மதியின்மையையும், பகைவர்களின் தொல்லையையும், அவர்களுக்கு அடங்கி போகும் நிலையையும் உறவினர்கள் நண்பர்களிடம் மன கசப்பையும் வழங்கி வந்தார்கள். உங்கள் தந்தையின் ஆரோக்கியத்திற்கு கேட்டினையும், ஒரு சிலருக்கு தோஷத்தையும் உண்டாக்கினார்.
உங்கள் ஆரோக்கியத்திலும் நிறைவே பிரச்சினைகளை வழங்கி வந்தார் அலைச்சல், திரிச்சல், நிம்மதியின்மை, தொழில் தடை என்று இக்காலம் சோதனையும் வேதனையும் நிறைந்தே காணப்பட்டது. இவற்றையெல்லாம் மீறி உங்களுக்கு சில நன்மைகள் நடந்திருக்கும் என்றால் அது உங்கள் பொறுப்புண்ணியத்தால் நடந்தது என்றே சொல்ல வேண்டும். இல்லையெனில் உங்கள் திசா புத்தி நன்றாக இருந்திருக்க வேண்டும்.
சனிபகவான் உங்கள் ராசிநாதனுக்கு நட்பானவர். உங்களுக்கு பாக்யாதிபதி என்றாலும், உங்களுக்கு தொழில் ஸ்தானாதிபதியும் அவரே ஆகிறார். அவர் உங்களுக்கு வழங்கும் பலன்கள் எல்லாம் உங்களின் பூர்வ புண்ணியத்திற்கேற்றதாகவே இருக்கும்.
வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளில் 12 ராசிகளும் சஞ்சரித்து வரும் சனி பகவான் அக்காலங்களில் அவர் அமர்ந்திருக்கும் வீடு களுக்குரிய பலன்களை உங்களுக்கு முழுமையாக வழங்குவார். அவர் பார்க்கும் இடங்களுக்கு உரிய பலன்களை அசுப பலன் களாகவே வழங்குவார்.
பத்தாம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் போது ஜாதகரின் ஆரோக்கியம் கெடும். மார்பு வலி ஏற்படும், மனம் ஒரு நிலையில் இல்லாமல் குழப்பம் காணும், தொழிலில் நஷ்டம். உத்தியோகத்தில் கஷ்டம், படிப்பில் சிரமம், குடும்பத்தில் சங்கடம் என்று அவதிப்படுத்தும். மதிப்பிற்கும் மரியாதைக்கும் கேடு உண்டாகும். பணம் செய்ய வழிகளில் செலவாகும்.
இதுவும் பொதுவான விதி தான். ஆனால் யாருடைய சாரத்தில் சஞ்சாரம் செய்கிறாரோ அதற்கேற்ப மேலே கூறிய பலனும் மாறுபடும். அதேபோல் ஜனன ஜாதகத்தில் சனிபகவான் எந்த நிலையில் இருந்தார் என்பதையும் பார்க்க வேண்டும்.
சனிபகவான் அமர்ந்த இடம் சிறப்பாகும். அவர் பார்க்கும் இடங்கள் தான் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
பத்தாம் இடம் முன்னேற்றத்தை வழங்கிட கூடியது. உடல் உபாதைகளை உண்டாக்கிட கூடியது. தொழில், கௌரவம், செல்வாக்கு, ஜீவனம் போன்றவற்றுக்கு காரணமானது. உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சரித்து அந்த ஸ்தானத்தை வலுவாக்க போகும் சனி பகவான் அங்கிருந்து உங்கள் ராசிக்கு சுகஸ்தானம், களத்திர ஸ்தானம், விரய ஸ்தானங்களை பார்வையிட போகிறார்.
சுகஸ்தானத்தை பார்வையிடும் சனி பகவானால் இடையூறுகள், அலைக்கழிப்புகள், குடும்பத்தில் வீண் விரோதம், தாயின் உடல் நலன் பாதிப்பு, தாய் வழி உறவுகளிடம் விரோதம், பூர்வீக சொத்துகளில் வில்லங்கம் ஏற்பட்டு கைக்கு வராத நிலை, வாகனத்தால் சங்கடம் வீடு வகையில் பிரச்சனை கல்வியில் தடை, பெற்றார் உறவினர்களின் பகை, வீண் அலைச்சலால் டென்ஷன், சுகத்திற்கு பாதிப்பு, நோய்களால் சோதனை என்ற நிலையம்.
களஸ்திர ஸ்தானம் எனும் நிலாமிடத்தின் மீது சனி பகவானின் பார்வை பதிவதால், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு அதனால் ஒரு சிலருக்கு பிரிவு கூட ஏற்படும். ஒரு சிலர் குடும்பத்தை விட்டு விலக வேண்டி வரும். வருமானக் குறைவும், அதனால் பணக்கஷ்டமும் கடன் தொல்லையும் ஏற்படும்.
விரைய ஸ்தானம் எனும், பன்னிரெண்டாம் இடத்தின் மீது சனிபகவானின் பார்வை பதிவதால் வீண் அலைச்சல், காரியம் கைகூடாமை மன உளைச்சல், பொருள் இழப்பு, எதிரிகளால் இடையூறு தொழிலில் நட்டம், உத்தியோகத்தில் சங்கடம் வேலையை இழக்க வேண்டிய சூழலும் உண்டாகலாம்.
சனிபகவானின் நிலையில் அவர் சஞ்சரிக்கும் நட்சத்திரத்திற்கேற்பவும், வக்ரகதியை அடையும் நேரத்திலும், பின்னோக்கி செல்லும் காலங்களிலும் இப்ப பலன்களை பெரும்பளவில் மாறுபடும்.
சனிபகவான் நேருகேதியில் சஞ்சரிக்கும் போது தான் நாம் மேற்கூறிய பலன்கள் நடைபெறும் அதுவும் பூர்வ புண்ணியத்திற்கேற்ப மாறுபடும்.
பரிகாரம்
ஒருமுறை திருநள்ளாறு சென்று நல தீர்த்தத்தில் நீராடி தர்பாரண்யேஸ்வரரை அர்ச்சனை செய்து வணங்கி வழிபட்டு வாருங்கள். சனிக்கிழமைகளில் உங்கள் அருகில் உள்ள சிவாலயத்தில் உள்ள சனீஸ்வர பகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். முதியவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் அன்னதானம் வஸ்திரதானம் செய்யுங்கள் சங்கடங்கள் நீங்கும்.